திருச்சி மாவட்டத்தில் உள்ள லால்குடி அருகே 42 வயதுடைய நபர் வசித்து வருகிறார். இவர் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி இறந்து விட்டார். கொத்தனாருக்கு 14 வயதில் மகள் இருக்கிறார். இந்நிலையில் கொத்தனார் தனது மகளை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அந்த சிறுமி கர்ப்பமானார்.

கடந்த ஜனவரி மாதம் சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த லால்குடி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் சிறுமியின் தந்தையை தேடி வந்தனர். சுமார் 7 மாத தேடுதலுக்குப் பிறகு நேற்று கொத்தனாரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.