தல அஜித் குமார் அவர்களின் நடிப்பில் நேற்றைய தினம் துணிவு திரைப்படம் வெளிவந்தது. சென்னை கோயம்பேடு ரோகிணி திரையரங்கில் அதிகாலையில் ரசிகர்கள் கொண்டாடிய போது சாலையில் சென்ற லாரி மீது ஏறி நடனமாடிய பரத் குமார் என்ற 19 வயது ரசிகர் ஒருவர் எதிர்பாராவிதமாக கீழே விழுந்ததில் முதுகு தண்டுவடம் உடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ரசிகர்கள் மன்றத்தை கலைத்து விட்டதாக கோரி தொடர்ந்து ரசிகர்களை புறக்கணித்து அவர்களை நல்வழிப்படுத்த தவறும் நடிகர் அஜித்குமார் அவர்களின் பொறுப்பற்ற தன்மைக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கம் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. திரைப்படத்தில் நடித்து கோடி கோடியாக பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக இருக்கும் அவர் மீது தமிழக அரசு குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பால் முகவர்கள் சங்க தலைவர் பொன்னுசாமி கூறியுள்ளார்.

மேலும் மரணம் அடைந்த ரசிகரின் குடும்பத்திற்கு அஜித்குமார் அவர்கள் ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்குவதோடு தனது பொறுப்பற்ற தன்மைக்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் தமிழ்நாடு பால் முகவர்கள் நல சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கின்றோம் என குறிப்பிடப்பட்டிருக்கின்றது.