ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதியில் பிரசித்தி பெற்ற ஏழுமலையான் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக செல்கிறார்கள். திருப்பதி கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக மாதந்தோறும் ஆன்லைன் டிக்கெட்டுகள் வெளியிடப்படுகிறது.

அந்த வகையில் தற்போது ஏப்ரல் மாதத்திற்கான தரிசன டிக்கெட்டுகள் குறித்த தகவலை தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அதாவது ஏப்ரல் மாதத்திற்கான ரூ. 300 தரிசன டிக்கெட் மார்ச் 28-ம் தேதி காலை 11 மணி அளவில் ஆன்லைனில் வெளியிடப்படும். மேலும் பக்தர்கள் ஆன்லைன் டிக்கெட்டுகளை பெறுவதற்கு https://tirupathibalaji.ap.gov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம்.