உத்திர பிரதேசம் மாநிலம் மீரட் நகரில் ஒரு சிறுமி மற்றும் அவரது சகோதரரான 10 வயது சிறுவன் ஆகியோர் திடீரென காணாமல் போனதால், அவர்களுடைய தந்தை ஷாகீத் பெய்க் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் படி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளது. அதாவது சிறுமி மற்றும் சிறுவனின் தாய் தன்னுடைய கள்ளக்காதலனுடன் சேர்ந்து பெற்ற பிள்ளைகளை கொடூரமான முறையில் கொலை செய்து கால்வாயில் வீசியுள்ளார்.

இந்த கொலைக்கு பக்கத்து வீட்டுக்காரரும் உறுதுணையாக இருந்துள்ளார். தற்போது போலீசார் பெற்ற குழந்தைகளை கொலை செய்த தாய், அவருடைய கள்ளக்காதலன், 2 பெண்கள் உட்பட 6 பேரை கைது செய்துள்ளனர். மேலும் கொல்லப்பட்ட சிறுவர் மற்றும் சிறுமியின் உடல்கள் கால்வாயில் வீசப்பட்ட நிலையில் இதுவரை உடல்கள் மீட்கப்படவில்லை. உடல்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.