சென்னை மேற்கு கூவம் பகுதியில் திருநங்கை விமலா என்பவர் வசித்து வருகிறார். கானா பாடகியான இவர் இன்று அதிகாலை தன்னுடைய நண்பர்களுடன் காரில் சென்னை மெரினா சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது கார் அதிவேகமாக சென்று கொண்டிருந்த நிலையில் கட்டுப்பாட்டை இழந்ததால் தடுப்புச் சுவரின் மீது மோதியது. இந்த விபத்தில் திருநங்கை விமலா மற்றும் அவர்களது நண்பர்களான பிரசாந்த், அருண் குமார், வசந்த் ஆகியோர் படுகாயமடைந்தனர்.

இது குறித்த தகவல் உடனடியாக காவல்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்திவரும் நிலையில், இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.