தெலுங்கு திரையுலகில் பிரபலமான தயாரிப்பு நிறுவனமாக மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இருக்கிறது‌. இந்த தயாரிப்பு நிறுவனம் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தை தயாரித்த நிலையில் தற்போது புஷ்பா 2 படத்தையும் பெரும் பொருட் செலவில் தயாரித்து வருகிறது. இதேபோன்று தெலுங்கில் வெளியான வீரசிம்கா ரெட்டி மற்றும் வாட்டர் வீரய்யா  போன்ற படங்களையும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தான் தயாரித்திருந்தது. இந்நிலையில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் மற்றும் புஷ்பா படத்தின் இயக்குனர் சுகுமார் வீட்டில் ஐடி ரெய்டு நடைபெற்ற வந்த நிலையில் நேற்று தான் ரெய்டு முடிவடைந்தது.

இந்த ரெய்டு முடிவடைந்த நிலையில் மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தற்போது 6 ஆயிரம் கோடி முதலீட்டில் படங்களை தயாரித்து வருவது தெரியவந்துள்ளது. அதன்படி புஷ்பா 2 திரைப்படம் உட்பட 19 திரைப்படங்களை தயாரித்து வருகிறார்களாம். இது போக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் ஒரு படத்தையும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் வெற்றி மாறன் படத்தையும் தயாரிப்பதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.