பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் சல்மான் கான். நடிகர் சல்மான் கானின் தனிப்பட்ட உதவியாளர் பிரசாந்த் குஞ்சல்கர் என்பவருக்கு கடந்த வாரம் இமெயில் மூலம் கொலை மிரட்டல் வந்தது. இதுகுறித்து காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்த லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் அவரது கூட்டாளி கோல்டி பிரார் ஆகிய ரவுடிகளின் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அதன் பிறகு நடிகர் சல்மான் கானுக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகர் சல்மான் கானுக்கு தற்போது இங்கிலாந்தில் இருந்து கொலை மிரட்டல் வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த இமெயில் ஐடி இங்கிலாந்தை சேர்ந்த ஒருவரின் செல்போன் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த நபர் தற்போது யார் என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.