தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகராக ஜொலித்தவர் நடிகர் பிரசாந்த். இவருக்கு முதல் திருமணத்தில் ஏற்பட்ட பிரச்சனைகளின் காரணமாக படங்களில் சரியாக கவனம் செலுத்த முடியாமல் போனது. அதன் பிறகு ஒரு வருடத்தில் பிரசாந்த் நடிப்பில் வெளியான அடுத்தடுத்த படங்கள் தோல்வியை சந்திக்க தமிழில் பட வாய்ப்புகளை இழந்தார். ராம்சரண் இயக்கத்தில் உருவான வினய விதய ராமா படத்தில் குணச்சித்திர வேடத்தில் பிரசாந்த் நடித்திருந்தார்.

தற்போது அவருடைய தந்தையும் நடிகருமான தியாகராஜன் இயக்கத்தில் அந்தாதூன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் ஒரு பேட்டியில் நடிகர் தியாகராஜாவிடம் பிரசாந்துக்கு இரண்டாம் திருமணம் எப்போது என்று கேள்வி கேட்கப்பட்ட நிலையில் அடுத்த மாதமே திருமணம் என்று அவர் கூறியுள்ளார். இதனால் நடிகர் பிரசாந்துக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருப்பது உறுதியாகியுள்ளது. மேலும் தற்போது நடிகர் பிரசாந்துக்கு 50 வயது ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.