மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவில் மோசடியாக போலி விரல்கள் பயன்படுத்தப்படுவதாக “ஓட்டு போடுவதற்கு போலி விரல்கள்” என புகைப்படம் ஒன்று பரவி வருகிறது. ஆனால் இது உண்மை அல்ல. 2013 ஆம் ஆண்டுக்கு முன்பு எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் ஜப்பானை சேர்ந்த ராகு உஷா என்ற குழுவின் முன்னாள் உறுப்பினர்கள் தங்களது கைவிரல் ஊனத்தை மறைக்க செயற்கையாக விரலை பயன்படுத்துவதை குறிக்கிறது.