ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தோல்பூர் என்ற மாவட்டத்தில் மேனியா என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியை சேர்ந்த 38 வயது நிரம்பிய நபர் ஒருவர் 7 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பூபால் சிங் (38) என்பவர் 7 வயது சிறுமியை 4.50 லட்சத்துக்கு வாங்கியுள்ளார்.

அதன் பிறகு சிறுமியை திருமணம் செய்து கொள்ள பூபால் சிங் முடிவு செய்துள்ளார். இந்த திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சிறுமியின் பெற்றோரே செய்துள்ளனர். இது குறித்த போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் பூபால் சிங்கை கைது செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ள பிற குற்றவாளிகளையும் கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர் ‌