ஓடிடி தளங்களில் வெளியாகும் வெப் தொடர்களில் அளவுக்கு மீறி ஆபாச காட்சிகள் இருப்பதாகவும் அதற்கு தணிக்கை வேண்டும் எனவும் பல தரப்பினரும் வலியுறுத்தி வருகிறார்கள். அண்மையில் பிரபல நடிகர்கள் ராணா டகுபதி மற்றும் வெங்கடேஷ் ஆகியோர் நடித்த ராணா நாயுடு என்ற வெப் தொடரில் அளவுக்கு மீறிய ஆபாச காட்சிகள் மற்றும் இரட்டை அர்த்த வசனங்கள் இருப்பதாக ரசிகர்கள் பலரும் கொந்தளித்திருந்தனர். பிரபலமான நடிகர்களாக இருந்து கொண்டு இப்படிப்பட்ட வெப் தொடரில் நடிக்கலாமா என நடிகர் ராணாவை ரசிகர்கள் விளாசி நிலையில் அவர் மன்னிப்பு கேட்டிருந்தார்.

இந்நிலையில் நடிகை விஜயசாந்தி தற்போது வெப் தொடரில் வரும் ஆபாச காட்சிகளை விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் கூறும் போது வெப் தொடர்களில் ஆபாச காட்சிகள் அதிகமாக வருகிறது. இதனால் பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள். இதை உணர்ந்து படம் எடுக்க வேண்டும். தொடர்களில் நடிக்கும் நடிகர் மற்றும் நடிகைகள் கவனமாக இருக்க வேண்டும். மேலும்  வெப்  தொடர்களுக்கும் தணிக்கை வேண்டும் என்று கூறியுள்ளார்.