தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டில் உள்ள ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம் வழங்க உத்தரவிட்டார். இந்த திட்டம் தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. அதன்படி முதற்கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு பகுதிகளில் உள்ள தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளுக்கு உட்பட்ட தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் இந்த திட்டத்தை விரிவுபடுத்த முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அந்த வகையில் நாகை மாவட்டத்தில் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் நேற்று முன்தினம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. நாகை காடம்பாடி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலெக்டர் அருண் தம்புராஜ் கலந்துகொண்டு பள்ளி குழந்தைகளுக்கு தயார் செய்யப்பட்டிருந்த காலை உணவை ருசி பார்த்துள்ளார். அதன் பின் குழந்தைகளுக்கு அவர் உணவு பரிமாறி உள்ளார்.  நகராட்சி கமிஷனர் ஸ்ரீதேவி, பொறியாளர் விஜய கார்த்தி உட்பட அதிகாரிகள் பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.