குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் தங்கியிருக்கும் குடும்பத் தலைவிகளுக்கு 100% மகளிர் உரிமைத் தொகை ரூபாய்.1000 கொடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். ஏழை-எளிய மக்களுக்கு இந்த திட்டம் வாயிலாக உரிமைத்தொகை வழங்கப்படும்.

அதற்காக வரி செலுத்துபவர்கள், பங்களாவில் இருப்பவர்களுக்கு இந்த தொகை கொடுக்க முடியுமா? நிச்சயமாக இந்த திட்டத்திற்கு தகுதியான அனைவருக்கும் ரூபாய்.1000 கிடைக்கும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்