ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ இ வி கே எஸ் இளங்கோவன் கடந்த வாரம் XBB வகை கொரோனா பாதிப்புடன் நுரையீரல் பாதிப்பும் கண்டறியப்பட்டதால் இயல்பான சுவாசம் மேற்கொள்ள முடியாமல் அவதிப்பட்டார். இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவை சமநிலைப்படுத்த செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு சீக்கிரம் சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

அதன் பிறகு அவர் உடல் நலம் தேடி வருவதாக தகவல் வெளியான நிலையில் தற்போது இளங்கோவன் மீண்டும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனாவில் இருந்து குணமடைந்து நலமுடன் இருப்பதாகவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் சமீபத்தில் அவர் வீடியோ மூலம் கூறியிருந்தார். இந்நிலையில் இன்று மீண்டும் ஐசியூவில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாக கூறப்படுகிறது