பழம்பெரும் நடிகர்கள் பலரையும் மக்கள் தற்போது நியாபகம் வைத்துள்ளனர். சிவாஜி கணேசன், எம்ஜிஆர் துவங்கி நாகேஷ், நம்பியார் என பல நடிகர்கள் பற்றி மக்கள் இன்றளவும் பேசுகின்றனர். அந்த அடிப்படையில் நல்ல நல்ல கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர்தான் முத்துராமன். இவர் கடந்த 1960 -1970 முன்னணி நடிகராக இருந்து உள்ளார்.

நடிகர் எஸ்.வி.சகஸ்ரநாமம் நடத்தி வந்த சேவா ஸ்டேஜ் நாடகங்களில் நடிக்க ஆரம்பித்த முத்துராமன், 100-க்கும் அதிகமான படங்களில் நடித்து உள்ளார். மேலும் இவர் நவரச திலகம் எனவும் அழைக்கப்பட்டு உள்ளார். சுலோசனா என்பவரை திருமணம் செய்து கொண்ட முத்துராமனுக்கு 4 பிள்ளைகள் இருக்கின்றனர். அதில் ஒருவர் சினிமாவில் நவரசநாயகன் என்ற பட்டத்துடன் வலம் வந்த கார்த்திக் ஆவார். தற்போது கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்திக்கும் திரையுலகில் நுழைந்து படங்கள் நடித்து வருகிறார்.