திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், வார்டு முகவர்களின் வடக்கு மண்டல மாநாட்டை எழுச்சியோடும்,  ஏற்றதோடும் அருணாச்சலம் நகரில்… கலைஞர் பெயரால் அமைந்திருக்கக் கூடிய திடலில் நடத்திக் காட்டி இருக்கக்கூடிய நம்முடைய மதிப்பிற்குரிய ஏவா வேலு அவர்களுக்கு என்னுடைய பாராட்டுகளையும்,  வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

எதையும் யாரும் ஏவாமலே செய்யக் கூடியவர் வேலுன்னு தலைவர் அவர்கள் பாராட்டினாரகள். திருவாரூரில் கலைஞர் கோட்டம்,  மதுரையில் கலைஞர் நூலகம், சென்னையில் கலைஞர் பெயரால்  நூற்றாண்டு பல்நோக்கு மருத்துவமனை இதயெல்லாம் எப்படி எல்லாம் அமையனும்னு நான் விரும்பினேனோ,  அதே போல அழகோடும்,  கம்பீரத்தோடு அமைத்தவர் தான் நம்முடைய அன்பிற்குரிய வேல் அவர்கள்.

கழகத்துடைய விழா வேந்தனா வேலு அப்படின்னு திருவண்ணாமலையில் கலைஞர் சிலை திறப்பு விழாவில் நான் சொன்னேன். மறந்திருக்க மாட்டீங்க. அப்படிப்பட்டவரோடு தோளோடு தோல் நின்று பணியாற்றக் கூடிய ஒருங்கிணைந்த திருவண்ணாமலை மாவட்ட கழக நிர்வாகிகளுக்கு கழகத்தின் சார்பிலும்,  தலைமை கழகத்தின் சார்பிலும்,  என்னுடைய சார்பிலும் எனது மனமார்ந்த நன்றியை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

கடந்த மார்ச் மாதம் 22 ஆம் தேதி அண்ணா அறிவாலயத்தில் மாவட்ட செயலாளர் கூட்டம் நடத்தினோம். அதிலிருந்தே நம்முடைய தேர்தல் பணிகளை நாம் தொடங்கிட்டோம். தமிழ்நாடு முழுவதும் பூத் கமிட்டிங்களை அமைச்சி இருக்கிறோம். இதோடு நான்கு வாக்குச்சாவடி முகவர்கள் மாநாட்டை நடத்தி முடித்து இருக்கிறோம். இன்னும் ஒன்னு மிச்சம் இருக்கு. சென்னை மண்டலம் மட்டும் தான் பாக்கி இருக்கு.

ஒவ்வொரு வாக்கச் சாவடிகளிலும், சாவடி பொறுப்பாளர்கள்  நியமிக்கப்பட்டார்கள். கோடிக்கணக்கான உறுப்பினர்கள் உள்ள நம்முடைய இயக்கத்தில்,  பல கட்ட ஆய்வுகளுக்கு பிறகு…  வாக்குச்சாவடி பொறுப்பாளர் என்கிற அடையாள அட்டை உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அதை பெற்றிருக்கக் கூடிய உங்களை எல்லாம் இந்த நேரத்திலே நான் வாழ்த்துகிறேன், பாராட்டுகிறேன் என தெரிவித்தார்.