சென்னை ராஜா அண்ணாமலைபுரத்திலுள்ள முத்தமிழ் பேரவையில் மருத்துவ அறிவியல் மாநாட்டை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் துவங்கி வைத்தார். இதையடுத்து மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது “மருத்துவ அறிவியல் மாநாடு முதல் முறையாக முத்தமிழ் பேரவையில் தமிழில் நடைபெறுவது மகிழ்ச்சியளிக்கிறது.

முத்தமிழ் பேரவையில் நடைபெறும் இம்மாநாட்டை பார்ப்பதற்கு கலைஞர் இருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருப்பார். தமிழை, தமிழே என்று சொல்லும்போது கிடைக்கும் சுகம் வேறு எங்கும் கிடைப்பதில்லை. எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்பதை செயல்படுத்தும் அரசாக திமுக அரசு இருக்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார்.