அ.தி.மு.க பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்று முதல் முறையாக சென்னையிலிருந்து தனது சொந்த ஊரான சேலம் மாவட்டத்திற்கு வந்தார். அங்கு எடப்பாடி பழனிசாமி பேசியதாவது, இப்போது  அதிமுகவின் பலம் மக்களிடையே பெருகி வருகிறது. தொண்டர்கள் பலம் நிறைந்த அதிமுக மிகப் பெரிய ஜனநாயக கட்சியாக திகழ்வதாக தெரிவித்தார்.

மேலும் இன்றைக்கு எதிர்கட்சிகளே இருக்கக்கூடாது என தி.மு.க அரசு நினைக்கிறது. அத்துடன் எதிர்க்கட்சி தலைவர்கள் மீது வழக்கு மேல் வழக்கு பதிவு செய்து பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இதற்கெல்லாம் அ.தி.மு.க ஒரு போதும் அஞ்சாது. ஓராயிரம் ஸ்டாலின் வந்தாலும் சரி அதிமுகவை தொட்டுக்கூட பார்க்கமுடியாது என அவர் தெரிவித்துள்ளார்