ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இதில் 41 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 80 பேருடைய வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதனை தொடர்ந்து வேட்புமனு ஏற்கப்பட்ட வேட்பாளர்கள் தங்களுடைய பிரச்சாரத்தை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் வேட்பு மனுவை திரும்ப பெற நாளை கடைசிநாள் என்பதால் ஒருசில கட்சிகள் பின்வாங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேமுதிகவுடன் காங்கிரஸ், அதிமுக கட்சிகள் ஆதரவுக்காக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுவதால் வேட்பு மனுவை திரும்ப பெறுவார்கள் என்ற பேச்சும் அடிபடுகிறது.