சேலம் எடப்பாடி அடுத்த கொங்கணாபுரம் அருகிலுள்ள குரும்பப்பட்டி பகுதியில்  தி.மு.க கழக முன்னோடிகள் ஆயிரம் பேருக்கு திமுக சார்பாக பொற்கிழி வழங்கும் விழா பொதுக்கூட்டம் நடந்தது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது, சேலத்திற்கு எப்போது வந்தாலும் வரவேற்பு பெரிதாகவும் எழுச்சியாகவும் இருக்கும்.

அவ்வாறு நீங்கள் கொடுக்கும் வரவேற்பும் எழுச்சியும் நம்பிக்கையளிக்கிறது. சென்ற சட்டமன்ற தேர்தலில் எங்களை ஏமாற்றி விட்டீர்கள். மீண்டும் அந்த தவறை செய்யமாட்டார்கள் என நம்புகிறேன். EPS உண்மையாக இருப்பது மூன்றே பேருக்கு தான். அதாவது மோடி, அமித்ஷா, ஆளுநர் ரவி போன்றோருக்கு மட்டும்தான் அவர் உண்மையாக இருக்கிறார்” என்று பேசினார்.