தமிழக முதல்வர் ஸ்டாலினின் பிறந்த நாளையொட்டி காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில் படகு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரிசுகளை வழங்கினார். அதன் பிறகு அமைச்சர் உதயநிதி மேடையில் விழாவில் கலந்து கொண்டவர்களிடம் பேசினார். அவர் பேசியதாவது, அதிமுக கட்சியில் தற்போது தலைவர் யார் என்பதே தெரியவில்லை.

எடப்பாடி பழனிச்சாமி யாருக்கும் விசுவாசமாக இல்லை. அவர் எம்ஜிஆரை பார்த்தது இல்லை. ஜெயலலிதாவுக்கும் அவர் நம்பிக்கையானவராக இல்லை. காலில் விழுந்து சசிகலாவிடம் பதவி வாங்கிய பிறகு அவருக்கே துரோகம் செய்துவிட்டார். நண்பர்களைப் போல ஒன்றாக இருந்துவிட்டு தற்போது ஓ. பன்னீர்செல்வத்தையும் கழட்டி விட்டு விட்டார். அவர் தற்போது பாஜக அலுவலகத்தில் காத்துக் கொண்டிருக்கிறார் என்று கூறினார்.