பாஜக கட்சியின் எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் அதிமுகவிலிருந்து விலகியது தனக்கு வருத்தம் தான் என்று கூறியது தற்போது பாஜக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து நயினார் நாகேந்திரன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, எடப்பாடி பழனிச்சாமி என்னை அதிமுக கட்சிக்கு அழைத்தார். எனக்கு எடப்பாடி பழனிச்சாமி நல்ல நண்பர் என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து பாஜகவில் இருந்து பல முக்கிய புள்ளிகள் விலகி திமுக மற்றும் அதிமுக உட்பட திராவிட கட்சிகளில் இணைந்து வரும் நிலையில் தற்போது எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் தற்போது அதிமுகவிலிருந்து விலகியது வருத்தமாக இருக்கிறது என்று கூறியுள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஏற்கனவே ஒருமுறை நயினார் நாகேந்திரன் திமுகவில் இணைவதாக தகவல் வெளியான நிலையில் தற்போது அதிமுகவில் அவர் விரைவில் இணைவார் என்று கூறப்படுகிறது.