தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று முதல் 3 நாட்களுக்கு நடைபெறாது என அறிவிக்கப் பட்டுள்ளது. நேற்று சட்டசபையில் நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, தகவல் தொழில்நுட்பத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.

இந்நிலையில் இன்று முதல் ஏப்ரல் 4-ம் தேதி வரை சட்டசபை கூட்டம் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ஏப்ரல் 5-ம் தேதி மீண்டும் சபை கூடும். மேலும் அன்றைய தினம் வேளாண் துறை, கால்நடை பராமரிப்பு துறை, மீன்வளத்துறை மற்றும் பால்வளத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது