தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் தனியார் youtube சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்தார். அப்போது அந்த பேட்டியில் முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது “இப்பவும் வாரிசு வாரிசு என தன்னை கூறும்போது வேதனையாக இருக்கிறது.

வாரிசு என்ற அடிப்படையில் முதல்வராக வந்து விடக்கூடாது, மக்களிடம் பெற்ற நம்பிக்கையில் தான் வரவேண்டும் என உறுதியாக இருந்தேன். அப்படித்தான் நான் வந்திருக்கிறேன். முதல்வர் பதவி என்பது முள் கிரீடம். அனைத்து விமர்சனங்களையும் கடந்து தான் சேவை செய்ய வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.