தி.மு.க-வை சேர்ந்த சிவாஜி கிருஷ்ணமூர்த்தி சில நாட்களுக்கு முன் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் தமிழக கவர்னர் பற்றியும், நடிகையும், பாஜகவை சேர்ந்தவருமான குஷ்புவையும் தகாத வார்த்தைகளில் பேசினார். இதுகுறித்த வீடியோ வைரலாகிய நிலையில், பலரும் அவரது பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இதையடுத்து அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து திமுக நீக்கியது. இந்நிலையில் சென்னையில் நிரூபர்களை சந்தித்த தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினரும், பாஜவை சேர்ந்தவருமான நடிகை குஷ்பு கூறியிருப்பதாவது, பெண்களை இழிவாக பேசுவோரை முட்டிக்கு முட்டி தட்டவேண்டும். DMK-வினர் அவதூறாக பேசுகிறார்கள்.

ஒரு பெண்ணாக கூறுகிறேன் தன்னை சீண்டிப் பார்க்காதீங்க. அப்புறம் தாங்க மாட்டீங்க. பெண்கள் குறித்து தவறாக பேச யாருக்கும் துணிச்சல் வரக் கூடாது. பெண்களுக்கு பிரச்னை எனில் நான் நிற்பேன். ஆகவே பெண்களை கேவலமாக பேசுவதை நிறுத்துங்கள். சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேச்சு தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தவுள்ளது” என்று குஷ்பு ஆவேசமாக பேசினார்.