மத்திய அரசு அலுவலகங்களில் ஊழியர்களின் வருகை பதிவில் பல குளறுபடிகள் ஏற்படுவதாக தொடர்ந்து புகார் எழுப்பப்பட்டு வருகிறது. அதாவது, மத்திய அரசு துறை மற்றும் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் காலதாமதமாக பணிக்கு வருவது, பணிக்கு வராமல் இருந்தும் அலுவலகத்திற்கு வருகை தந்தது போல கணக்கு காட்டுவது, மாலையில் பணி முடியும் முன்பாகவே வீட்டிற்கு கிளம்புவது என பல குளறுபடி வேலைகள் செய்து வருவதாக புகார் எழுப்பப்பட்டு வந்தது.

இந்த நிலையில் மத்திய அரசு துறை மற்றும் நிறுவனங்களில் பணியாற்றும்  ஊழியர்கள் உரிய நேரத்தில் பணிக்கு வருகிறார்களா என்பதனை சரிபார்க்கும் வகையில் பயோமெட்ரிக் வருகை பதிவை கொண்டுவர மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் முறையில் மத்திய அரசு ஊழியர்களின் வருகைப்பதிவு செய்யப்படும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.