இந்தியாவின் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கியானது தன்னுடைய வாடிக்கையாளர்களுக்காக பல்வேறு திட்டங்களையும், சலுகைகளையும் அறிவித்து வருகிறது. அதுமட்டுமின்றி வாடிக்கையளர்களின் நலனுக்காகவும் பல அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்தவகையில் வங்கிகளின் மூலம் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை செய்யும்போது வேறு அக்கவுண்ட்களுக்கு பணத்தை அனுப்பி சிலர் தெரியாமல் விடுவதுண்டு.

இவ்வாறு நடந்தால் உடனடியாக சொந்த கிளையில் இது தொடர்பாக புகார் அளிக்க வலியுறுத்தியுள்ளது எஸ்பிஐ வங்கி. அதன் மேல் கிளை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிட்டால் https://crcf.sbi.co.in/ccf இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்து புகார் அளிக்க அறிவுறுத்தியுள்ளது.