கிருஷ்ணகிரி ராணுவவீரர் பிரபு கொலையை கண்டித்து தமிழக பா.ஜ.க சார்பாக சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதில் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, மாநில துணைத் தலைவர்கள் கரு.நாகராஜன், வி.பி.துரைசாமி உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் மற்றும் பல பிரிவுகளைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள் பங்கேற்றனர்.

இந்நிலையில் முன்னாள் ராணுவ வீரரான கர்னல் பாண்டியன் பேசியதாவது “எங்களுக்கு குண்டு வைக்கத் தெரியும். ஆகவே இதுபோன்ற செயல் இனிமேல் நடைபெற்றால் நாங்கள் திமுகவுக்கு எதிராக வெடிகுண்டு வைப்போம். தி.மு.க கொள்ளையடிப்பதிலும், கொலை செய்வதிலும் தைரியமானவர்கள்” என அவர் ஆவேசமாக பேசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.