டெல்லி சாதிக் நகரிலுள்ள தனியார் பள்ளிக்கு இன்று இ-மெயில் வாயிலாக மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருக்கின்றனர். இது தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பள்ளியிலிருந்து மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட அனைவரும் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.

அதன்பின் வெடிகுண்டு சோதனை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு பள்ளி முழுவதும் தீவிர சோதனை நடத்தப்பட்டது. இதுபற்றி டி.சி.பி. சந்தன் சவுத்ரி செய்தியாளர்களிடம் கூறியதாவது, பள்ளியில் 2 சுற்றுகளாக சோதனை நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து 3-வது சுற்று சோதனை நடைபெற இருப்பதாகவும் தெரிவித்தார். தற்போது பள்ளிக்கு வந்தது ஒரு போலி மிரட்டலாக இருக்கும். இதனிடையே இ-மெயில் முகவரி வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர்களை அடையாளம் காணும் பணியானது நடந்து வருவதாக அவர்  தெரிவித்துள்ளார்..