
அமெரிக்காவில் மின்சார வாகன ஊக்குத்தொகையை குறைக்கும் மசோதாவுக்கு எலான் மஸ்க் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து ட்ரம்புக்கும், மஸ்க்கும் இடையே கருத்து வேறுபாடு தீவிரமாகி வருகிறது.
இந்த சூழ்நிலையில் மஸ்க் புதிய அரசியல் கட்சி உருவாக்குவது குறித்து தற்போது தனது எக்ஸ் தள பக்கத்தில் கருத்துக்கணிப்பு பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இதனை அடுத்து தற்போது அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் கூறியதாவது, தற்போது சீனா, ரஷ்யா மற்றும் ஈரானுடன் இணைந்து அமெரிக்கா பணியாற்றி வருகிறது.
இந்த சூழ்நிலையில் எலான் மஸ்குடன் பேசுவதற்கு திட்டமிடவில்லை என கூறியுள்ளார். மேலும் மஸ்க் தனது சுயநினைவை இழந்துவிட்டார் அப்படிப்பட்ட ஒருவரிடம் தன்னால் பேச முடியாது என அதிரடியாக கூறியுள்ளார்.
இதனிடையே எலான் மஸ்க் சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகம் நெட்வொர்க் தொடர்பில் டிரம்புக்கும் சம்பந்தம் இருப்பதாகவும், ஆனால் விசாரணையின் விவரங்கள் கண்டுபிடிப்புகளில் பகிரங்கப்படுத்தப்படவில்லை எனவும் குற்றம் சாட்டி இருந்தார்.
அதனைத் தொடர்ந்து ட்ரம்ப் பதவி நீக்கம் செய்ய வேண்டும். துணை ஜனாதிபதி ஜே.டி. வான்சை அவருக்கு பதிலாக நியமிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகிறார். இதனால் இருவருக்கும் இடையே தொடர்ந்து கருத்து வேறுபாடு அதிகரித்து வருவது அதிக பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது .