சேலம் மாவட்டத்தில் உள்ள வெண்ணந்தூர் பிரிவு அலுவலகத்தில் சுகவனம் என்பவர் உதவி பொறியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் வெட்டுக்காட்டில் புதிதாக நிறுவப்பட்ட மின்மாற்றியை பயன்பாட்டிற்கு கொண்டு வராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இது தொடர்பாக அதிகாரிகளுக்கு புகார் அளிக்கப்பட்டதால் பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தி ஆட்டையாம்பட்டி உபகோட்ட உதவி செயற்பொறியாளர் பிரேமாவுக்கு உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில் பிரேமாவின் நடவடிக்கைகளுக்கும் சுகவனம் ஒத்துழைப்பு அளிக்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து இதர பிரிவு உதவி பொறியாளர் மூலம் பணி முடிக்கப்பட்ட பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இது தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இந்நிலையில் சேலம் வட்ட மேற்பார்வை பொறியாளர் சுப்பிரமணி மின்வாற்றியாய் பயன்பாட்டிற்கு கொண்டு வராமல் காலம் தாழ்த்திய மின்வாரிய உதவி பொறியாளர் சுகவனம், போர் மேன் கண்ணன் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து அதிரடியாக உத்தரவிட்டார்.