சேலம் மாவட்டத்திலுள்ள ஓமலூர்-தாரமங்கலம் மெயின் ரோட்டில் வேலகவுண்டனூரில் ஆதரவற்றோர் இலவச முதியோர் இல்லம் கட்டப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழாவில் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க் கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி பங்கேற்று ஆதரவற்றோர் முதியோர் இல்லத்தை திறந்து வைத்தார்.

இதையடுத்து விழாவில் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது “ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம். அதை நிறைவேற்றி காட்டியவர்கள் தான் எம்ஜிஆர், ஜெயலலிதா என பெருமிதம் தெரிவித்தார். மேலும் ஏழை என்ற சொல் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என்பது தான் அதிமுகவின் கொள்கை, லட்சியம் ஆகும். அண்ணா, எம்ஜிஆர் ஜெயலலிதாவுக்கு குழந்தைகள் கிடையாது. அவர்களுக்கு நாம் தான் குழந்தைகள். அவர்கள் எண்ணங்களை வாரிசாக நிறைவேற்றி வருகிறோம் என்று அவர் பேசினார்.