மதுரையில் அதிமுகவின் வீர வரலாற்று பொன்விழா எழுச்சி மாநாடு நடைபெற்று வருகிறது.  பெரும் எதிர்பார்ப்புக்கிடையே நடந்துவரும் இந்த மாநாட்டில் தற்போது தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி பேசி வருகின்றார்.  இந்த மாநாடு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக எடப்பாடி பழனிச்சாமிக்கு சர்வ சமய அமைப்பினர் சார்பாக ”புரட்சித் தமிழர்” எடப்பாடி பழனிச்சாமி என்ற வகையில் ”புரட்சித்தமிழர் பட்டம்” வழங்கப்பட்டுள்ளது.