ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள சைபாத் நகரில் இருந்து 101 கிலோமீட்டர் தொலைவில் இன்று காலை 8 மணி அளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.1 என்ற அளவில் பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னதாக காலை 6.45 மணிக்கு சைபாத் அருகே 4.3 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்தினால் பாதிப்புகள் எதுவும் இல்லை என தகவல்கள் வெளியாகி உள்ளது.