நைஜீரியா நாட்டின் லாகோஸ் நகரில் தண்டவாளத்தை கடக்க முயன்ற பேருந்து மீது ரயில் மோதி பெரும் விபத்து ஏற்பட்டு இருக்கிறது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் மேற்கொண்ட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதோடு படுகாயமடைந்த 80 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் விபத்து நடந்த பகுதிக்கு சென்று இறந்தவர்களின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதேநேரம் அதிர்ஷ்டவசமாக ரயிலில் பயணம் மேற்கொண்ட யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.