சென்னையிலிருந்து கண்டெய்னர் லாரி ஒன்று கோயம்புத்தூர் நோக்கி சென்றது. அந்த லாரியை வினோத் என்பவர் ஓட்டி சென்றார். இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தொப்பூர் கணவாய் கட்டமேடு பகுதியில் சென்ற போது வினோத்தின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி எதிரே வந்த கேஸ் டேங்கர் லாரி மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி வினோத் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு சென்று வினோத்தின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனையடுத்து போலீசார் விபத்துக்குள்ளான லாரிகளை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இதனால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து கடமையாக பாதிக்கப்பட்டது.