பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இளைஞர்களை மதுபோதையில் வைத்திருக்க வேண்டும் என்பதுதான் திராவிட மாடல் ஆட்சி என்று விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, இளைஞர்களை மது போதையில் வைத்திருக்க வேண்டும் என்பதுதான் திராவிட மாடல் ஆட்சி.

ஏனெனில் போதை தெளிந்து விட்டால் வாக்களிக்க மாட்டார்கள் என்ற பயம் திராவிட கட்சிகளுக்கு இருக்கிறது என்று விமர்சித்துள்ளார். வருகிற 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி வைப்போம் என்ற அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று கூறியுள்ளார். மேலும் பாமக தலைமையில் கூட்டணி அமைக்க வியூகம் வகுப்போம் என்றும் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.