செய்தியாளர்களிடம் பேசிய புகழேந்தி ( ஓபிஎஸ் ஆதரவு ), தந்தை பெரியார் பற்றியும், பேரறிஞர் அண்ணா பற்றியும், புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் பற்றியும், அம்மா பற்றியும் பேசியதை காத்துல விட்டுடலாமா….? உனக்கு மானம், மரியாதை, ரோஷம் அதெல்லாம் இருக்கா ? இல்லையா ? எனக்கு தெரியாது. இந்த ஸ்டண்ட்ல நீ மாத்தி பேசினா…  ஜெயக்குமார் உன்னை ரோட்ல போற எவனும் மதிக்க கூட மாட்டான். சி.வி சண்முகத்துக்கு அதான். ரெண்டு பேரும் பழனிசாமி சொன்னாருன்னு சொல்லி,  நீங்க ஜால்ரா போட்டீங்கன்னா…. 

உங்கள பாக்குறவன்  பைத்தியக்காரன்…  தூன்னு காரி துப்பிட்டு போயிடுவான்.  அந்த ஸ்டாண்ட்ல நில்லுங்க. தொண்டர்கள் ஒத்துக்க மாட்டாங்க என சொன்னீங்க தானே. பிஜேபி தொண்டர்கள், ADMK  தொண்டர்கள் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். ADMK தொண்டர்கள் முழுவதுமாக பிஜேபி தொண்டர்களை ஏற்க மாட்டார்கள்.

பிஜேபிக்கு தொண்டர்கள் இருக்கானா…?   இல்லையாங்குறது  வேற விஷயம். அதுக்கு நான் வரல. அதுக்கு சுப்ரமணியன் சாமி தான் பதில் சொன்னாரு, அழகா சொல்லிட்டு போய்ட்டாரு…..  பிஜேபியின் ஒரு கட்சி இருக்கா ? தமிழ் நாட்டுல….  அவன் யாரு ? சார் அண்ணாமலை….  யார் அவன் ? அவர்தான்  பிஜேபி கட்சி தலைவர்.   அப்படி ஒருத்தன் எனக்கு தெரியாதே….  பிஜேபி இல்லையே தமிழ் நாட்டுல…  அப்படிண்டு போய்ட்டாரு. அவர்கிட்ட போய் பதில் சொல்லிவிட்டோம் என தெரிவித்தார்.