செய்தியாளர்களிடம் பேசிய மே 17 இயக்கம் திருமுருகன் காந்தி,  விவசாயிகளை கைது செய்து,  ஆளுக்கு ஒரு சிறைச்சாலை….  ஒவ்வொரு சிறைச்சாலைக்கும் பிரித்து அனுப்புவது,  மிக மிக அயோக்கியத்தனமானது… கீழ்த்தனமானது. போராடக்கூடியவர்களை, அவர்கள்  வீட்டிலிருந்து… மாவட்டத்திலிருந்து….  பாளையங்கோட்டை சிறைக்கும்…. திருச்சி சிறைக்கும்…..கோவை சிறைக்கும்….மதுரை சிறைக்கும் பிரிச்சி அனுப்புகிறீர்கள் என்றால்,  நீங்கள் வெள்ளைக்கார  ஆட்சியா நடத்துகிறீர்கள் ? இவர்கள் என்ன தீவிரவாதிகளா ?

இவர்களைப் பிரித்து பிரித்து அனுப்பி என்னத்தை சாதிக்க போகிறீர்கள் ?  அந்த குடும்பத்தை சித்தரவதை செய்து என்ன சந்திக்க போறீங்க ? நீங்கள் சாடிஸ்டா ? திருவண்ணாமலையில் இருக்கின்ற ஏழை விவசாய குடும்பத்தை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டு,  பாளையங்கோட்டையில் வைத்தல் அந்த குடும்பம் பாளையங்கோட்டையில் போய் எப்படி  பார்க்க முடியும் ?

அந்த பெற்றோர்கள் எப்படி பேசுவார்கள் ? அவர்கள் மனைவி  எப்படி போய் அவரை சந்திப்பார்கள் ? இங்கிருந்து பாளையங்கோட்டை போய் சந்திக்குமா ? அயோக்கியத்தனமாக இல்லை. வெள்ளைக்காரன் முறையை இன்றைக்கும் நீங்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள்.. அவன்தான் அந்தமானுக்கு அனுப்புவான், வேறு ஊருக்கு அனுப்புவான்…  ராஜாஜி காலத்தில் பெரியாரை பெல்காம்க்கு  அனுப்பி வைத்தார்கள்..  ராஜாஜியை பெரியாரை சித்திரவதை செய்தார்.

அதே முறை….  கீழ்த்தனமான முறையில்…. இந்த மக்களை  ஒவ்வொரு சிறைச்சாலைக்கு அனுப்புவது அயோக்கியத்தனமாக இல்லையா? கூடங்குளம் போராட்டம் நடந்த பொதும்  இதே வேலையை அன்றைக்கு அதிமுக அரசு செய்தது. அன்றைக்கு போராடியவர்களை தமிழ்நாடு முழுவதும் பல்வேறு சிறைச்சாலைகளில் அடைத்தார்கள். அந்த மக்கள் எப்படி குடும்பத்தாரை சந்திப்பாருங்கள் ? இதை எப்படி புரிந்து கொள்வது ?  இது ஒரு பாசிஸ்ட் அரசாங்கத்தினுடைய வேலையாக தான் பார்க்க முடியும் என தெரிவித்தார்.