இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத இசையமைப்பாளர்களில் ஒருவராக விளங்குபவர் இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான். இவர் சென்னையில் நடைபெற்ற ஒரு விருது வழங்கும் விழாவில் தன்னுடைய மனைவி சாய்ரா பானுவுடன் கலந்து கொண்டார். அப்போது தன்னுடைய மனைவியிடம் பேசுமாறு ஏ.ஆர் ரகுமான் கூறினார். சாய்ரா பானு பேச ஆரம்பிக்கும் போது ஏ.ஆர் ரகுமான் ஹிந்தியில் பேச வேண்டாம் தமிழில் பேசுங்கள் என்று கூறினார்.

இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியான நிலையில் நடிகை கஸ்தூரி ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அதில் ஏ.ஆர் ரகுமானின் மனைவிக்கு தமிழ் வராதா.? அவங்க தாய்மொழி என்ன. குடும்பத்தில் என்ன மொழி பேசுவாங்க என பதிவிட்டுள்ளார். இந்த பதிவை தன்னுடைய twitter பக்கத்தில் வெளியிட்ட ஏ.ஆர் ரகுமான் காதலுக்கு மரியாதை என்று பதிவிட்டு நடிகை கஸ்தூரிக்கு பதிலடி கொடுத்துள்ளார்.