செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நான் இந்த மேடையில் நிக்கிறேன், நிறைய விஷயங்கள் பேச போறேன்,  சனாதனம் பத்தி பேசுறேன். பலபேருக்கு வயித்தெரிச்சல் இருக்கும் அப்படினு சொன்னேன். நா நெனச்சது நடந்து இருக்கு. அன்னைக்கி தெளிவா சொல்லிட்டேன்… நிலையானது இதுவே மாற்றம் பண்ண முடியாதுன்னு தான் ”சனாதனம்” என  அர்த்தம் சொன்னேன். 

பெண்களை வீட்டைவிட்டு வெளிய வரக்கூடாதுன்னு சொன்னாங்க.. பெண்கள் படிக்க கூடாதுன்னு சொன்னாங்க… திராவிடம்தான் பெண்களுக்கு படிப்பு கொடுத்துச்சு.  இப்போ காலை உணவு திட்டம் கூட பெண்கள், மாணவர்கள், மாணவிகள் வெளில வந்து…. பள்ளிக்கூடத்துக்கு வந்து படிக்கணும்னுங்குறதுக்கு தான்…. தலைவர் பல்வேறு திட்டங்கள் கொண்டு வந்து இருக்காங்க… புதுமை  மாணவிகள் படிக்கணும் அப்படினுங்குறதுக்கு தான் புதுமைப்பெண் திட்டம். இப்படி பல்வேறு திட்டங்கள்.

பெண்களை அடிமைபடுத்தி வச்சி இருந்தது தான் ”சனாதனம்”. பெண்கள் மேலாடை அணியக்கூடாது என சொன்னாங்க. கணவன் இறந்த உடனே உடன்கட்டை ஏறணும் சொன்னாங்க. இது எல்லாம் தான் ”சனாதனம்” இதை தான் நான் ஒழிக்கணும் சொன்னேன், அதான் தொடர்ந்து சொல்லுவேன் என தெரிவித்தார்.