மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான நீலகிரி மாவட்டம் கோடநாடு பங்களாவில் 2017ல் கொள்ளை மற்றும் கொலை சம்பவங்கள் நடைபெற்றது. இந்த கொலை கொள்ளையில் வழக்கில் தொடர்புடைய ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ் உள்ளிட்ட சிலர் மர்மமான முறையில் உயிரிழந்தனர். இந்நிலையில், கோடநாடு வழக்கில் கனகராஜின் சகோதரர் தனபால் தன்னை தொடர்புபடுத்தி பேசுவதற்கு தடை விதிக்ககோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி மனு அளித்துள்ளார். மேலும், அந்த மனுவில், 71.10 கோடி மான நஷ்ட ஈடாக வழங்க உத்தரவிடவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு செப்.19ம் தேதி விசாரணைக்கு வருகிறது.