அதிமுகவின்  52 ஆம் ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, காவல்துறை அதிகாரிகளுக்கு இன்னைக்கு பாதுகாப்பு கிடையாது.  சென்னையில் ஒரு பொதுக்கூட்டம் நடந்துட்டு இருந்துது.  அந்த பொதுக்கூட்டத்திற்கு பெண் காவலர் போனாங்க. அந்த பெண் காவலரை பார்த்துட்டு,  திமுக கட்சியை சேர்ந்த இரண்டு இளைஞர்கள்  இடுப்பு பிடித்து கிள்ளுறான்…  பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்கிற அரசாங்கமா ? சொல்லுங்க பார்க்கலாம்….

பெண் போலீஸ் இடுப்பை புடிச்சி கிள்ளுறாங்க. இந்த அரசாங்கத்தில் சட்ட ஒழுங்கு எந்த அளவுக்கு சீர் கேட்டு இருக்கிறது என்பதை நாட்டு மக்கள் உணர வேண்டும். மக்கள் எதிர்ப்பு கிளம்பிவிட்டது… திமுக ஆட்சி மீது மக்கள் வெறுப்பாகிவிட்டது…. எங்கு பார்த்தாலும் போராட்டம்… அரசு ஊழியர்கள் ஒரு பக்கம் போராட்டம்… பொதுமக்கள் ஒரு பக்கம் போராட்டம்… விவசாயிகள் ஒரு பக்கம் போராட்டம்… இப்போ இந்த அவலங்களை எல்லாம் மறைப்பதற்கு…

இந்த போராட்டத்தை திசை திருப்புவதற்கு திரு.உதயநிதி ஸ்டாலின் ஒரு ஆயுதத்தை எடுத்தார். சனாதனம் அப்படின்னு ஒரு ஆயுதத்தை எடுத்து அப்படியே விட்டார். அது நாடு முழுவதும் பத்திகிட்டு. இந்த வெறுப்பு அரசியல்.. இந்த அரசாங்கத்தின் மீது இருக்கின்ற வெறுப்பை இன்றைக்கு டைவர்ட் பண்றாங்க… அதை திசை திருப்புறாங்க… இதுதான் சனாதனம்.

ஏன் இதுக்கு முன்னாடி எல்லாம் தெரியாதா ? உங்கள் தாத்தா இருந்தாரே தெரியாதா ? திரு கருணாநிதி இருந்தாரே  தெரியாதா? இதற்கு முன்னாடி உங்க அப்பா திரு. ஸ்டாலின் அவர்கள் துணை அமைச்சராக இருந்தாரே தெரியாதா ? ஆகவே வேண்டுமென்றே திட்டமிட்டு மக்களை குழப்பி…  இந்த ஆட்சி மீது மக்களுக்கு  இருக்கின்ற வெறுப்பை திசை திருப்புவதற்காக சனாதனம் என்ற ஒரு ஆயுதத்தை தூக்கி வெளியிட்டார்கள். அது பத்திக்கொண்டு ஆங்காங்கே பேசிக்கிட்டு இருக்கு என தெரிவித்தார்.