கடலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட கிரிக்கெட் வீரர்களுக்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் இலவச பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. இந்த பயிற்சி முகாம் வருகிற மே மாதம் 1-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரை காலை 6 மணி முதல் 9 மணி வரையும், மாலை 3 மணி முதல் 6 மணி வரையும் கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது. கிரிக்கெட் வீரர்களுக்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்க பயிற்சியாளர் ராகுல் பயிற்சி அளிக்கிறார்.

இதனையடுத்து பயிற்சியில் ஈடுபடும் வீரர்கள் 19 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். வெள்ளை நிற உடை, வெள்ளை நிற காலணி அணிந்து பயிற்சிக்கு வர வேண்டும். விருப்பம் இருப்பவர்கள் முகாமில் கலந்து கொண்டு பயன் பெறலாம். இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் கூத்தரசனை 9842309909 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.