ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் தரும் திரைப்படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது எஸ்.ஜி.சார்லஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள சொப்பன சுந்தரி திரைப்படத்தில் நடித்திருக்கின்றார். இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கின்றது. இதில் தென்னிந்திய சினிமா உலகைச் சார்ந்த பிரபலங்கள் பலரும் பங்கேற்று வெளியிட்டார்கள். இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் பேசும்போது கூறியுள்ளதாவது, படத்தில் நாயகியாக ஒவ்வொரு திரைப்படத்திலும் நடிப்பதற்கு என்னுடைய பலமே இயக்குனர்கள் தான்.

ஒரு இயக்குனர் தான் நடிகர், நடிகைகள் பிரம்மாண்டமாகவும் பிரமிப்பாகவும் காட்சிப்படுத்த முடியும். அப்படி பார்க்கும் போது எனக்கு இயக்குனர்கள் மிகவும் முக்கியமானவர்கள். இயக்குனர் சார்லஸ் முதலில் இந்த திரைப்படத்தை என்னை ஹீரோயினாக வைத்து இயக்க மாட்டேன் என கோபமாக தெரிவித்தார். இதன்பின் அவரை நான் அழைத்தற்கு வருகை தந்தார். கோபத்தால் எதுவும் நடக்காது. அதனால் இழப்புதான் ஏற்படும். நான் வாழ்க்கையில் நிறைய முறை கோபப்பட்டதால் ஏராளமானவற்றை இழந்திருக்கின்றேன்.

ஒரு நடிகர் நட்சத்திர நடிகராக, சூப்பர் ஸ்டாராக உயர்வதற்கு இயக்குனர்கள் தான் அடித்தளமாக இருக்கின்றார்கள். அதிலும் குறிப்பாக படத்தில் கதையின் ஹீரோயினாக நடிக்க வைத்தால் அவர்களை ரசிகர்கள் எப்படி கொண்டாடுவார்கள் எப்படி கொண்டாட வேண்டும் என்பது இயக்குனர்களின் கையினால் இருக்கின்றது என பலவற்றை ஓபனாக பேசி உள்ளார்.