விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆவியூரில் ஜல்லிக்கட்டு போட்டி சிறப்பாக நடைபெற்றது. பொதுவாக ஜல்லிக்கட்டு முடிந்த பிறகு சில காளைகள் திசை தெரியாமல் எங்காவது ஓடிவிடும். நேற்று கரிசல்குளத்தில் இருக்கும் தோட்டத்தில் 2 ஜல்லிக்கட்டு காளைகள் இறந்து கிடப்பதை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் விசாரணை நடத்தியதில் மின்வேலியில் சிக்கி 2 காளைகள் உயிரிழந்தது தெரியவந்தது. அதில் ஒரு காளை மதுரையைச் சேர்ந்த தி.மு.க பிரமுகரான மணிகண்டன் என்பவருக்கு சொந்தமானது. மற்றொரு காளையின் உரிமையாளர் யார் என்பது தெரியவில்லை. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.