புதுக்கோட்டை மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு இன்று அரசு அலுவலகங்களுக்கும், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பொருந்தாது. மேலும் விடுமுறையை ஈடு செய்யும் விதமாக ஏப்ரல் ஒன்றாம் தேதி பணி நாளாக இருக்கும் என்று அறிவித்துள்ளார்.