சென்னை மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு சேப்பாக்கத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியை காண வரும் ரசிகர்கள் தங்கள் ஐபிஎல் டிக்கெட்டுகளை காண்பித்து மாநகர பேருந்துகளில் கட்டணம் இன்றி பயணிக்கலாம். அதேபோல் மெட்ரோ ரயில் சேவை நள்ளிரவு ஒரு மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் சிந்தாதிரிப்பேட்டையில் இருந்து வேளச்சேரி வரை சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.