இந்தியாவில் பல்வேறு இடங்களில் ஐபிஎல் போட்டிகள் கடந்த மார்ச் மாதம் 31-ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது. நேற்றைய தினத்தோடு லீக் சுற்றுகள் முடிவடைந்த நிலையில் குஜராத், சிஎஸ்கே, லக்னோ மற்றும் மும்பை ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இந்நிலையில் நாளை சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் பிளே ஆப் சுற்றுகள் நடைபெற இருக்கிறது.

இந்த போட்டிகளை பார்ப்பதற்கு மெட்ரோ ரயிலில் பயணிக்கும் ரசிகர்கள் கண்டிப்பாக டிக்கெட் எடுக்க வேண்டும் என தற்போது மெட்ரோ ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இரவு 11 மணிக்கு மேல் டிக்கெட் கவுண்டர்கள் செயல்படாது என்பதால் அதற்கு முன்னதாகவே ரசிகர்கள் டிக்கெட் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மே 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் சென்னையில் பிளே ஆப் சுற்றுகள் நடைபெற இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.