ஐபிஎல் போட்டிகள் மார்ச் 31-ம் தேதி முதல் மே 28-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக எம்.எஸ் தோனி இருக்கிறார். 40 வயது ஆகும் எம்.எஸ் தோனி இந்த வருடத்துடன் ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெற உள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் திடீர் திருப்பமாக எம்.எஸ் தோனி அடுத்த ஐபிஎல் போட்டியிடம் விளையாடுவார் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் ரெய்னா கூறியுள்ளார்.

இது குறித்து மேலும் அவர் கூறியதாவது, எனக்கு தெரிந்தவரை எம்.எஸ் தோனி அடுத்த வருடமும் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தொடர்வார். உடல் பிட்னஸுடன் இருக்கும் எம்.எஸ் தோனி கண்டிப்பாக விளையாடுவார் என்று தான் நினைக்கிறேன் என்று முன்னாள் சிஎஸ்கே வீரர் ரெய்னா கூறியுள்ளார். மேலும் ஐபிஎல் தொடரில் தோனி அடுத்த வருடம் விளையாடுவார் என்ற தகவல் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.